×

பெரம்பலூரில் புதிதாக கட்டிய தாலுகா அலுவலக புதிய கட்டிடத்தை காணொளி காட்சியில் முதல்வர் திறப்பு

பெரம்பலூர், நவ. 5: பெரம்பலூரில் ரூ.2.53 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பெரம்பலூரில் ரூ.2.53கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதைதொடர்ந்து பெரம்பலூர் கலெக்டர் வெ ங்கட பிரியா, எம்எல்ஏக்கள் (பெரம்பலூர்) இளம்பை தமிழ்ச்செல்வன், (குன்னம்) ராமச்சந்திரன் ஆகியோர் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.

புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், பெரம்பலூர் தாசில்தார் அருளானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர். தாலுகா அலுவலக புதிய கட்டிடம் தரைதளம், முதல்தளம் என 2 தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் வரவேற்பறை, தாசில்தார் அறை, நில அளவைகள் அறை, கணினி அறை, பதிவு அறை, முதல்தளத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அறை, அலுவலக அறை, கூட்டரங்கம், வட்டாட்சியர் (ச.பா.தி) அறைகள், பதிவு அறை, எழுதுபொருள் வைப்பறையுடன் அமைந்துள்ளது.

Tags : Chief Minister ,office building ,Perambalur ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...