×

பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாப பலி

நாகை,நவ.5: வேளாங்கண்ணி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டிடத் தொழிலாளி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். வேளாங்கண்ணி அருகே சோழவித்யாபுரம் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்(25). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி தனது வீட்டில் இருந்து திருப்பூண்டிக்கு பைக்கில் சென்றார். அப்போது சோழவித்யாபுரம் பாலம் அருகே வந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த தர் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : construction worker ,
× RELATED கட்டிட தொழிலாளி கொலை வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை