×

தென்னிலை கிழக்கு ஊராட்சியில் பாரத கிரக பஞ்சாயத்து இயக்க கூட்டம்

குளித்தலை. நவ.5: அகில பாரத கிரக பஞ்சாயத்து இயக்க  குளித்தலை கிளை கூட்டம் கிராமியம் கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிளை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தென்தமிழக ஏபிஜிபி தலைவர் பழனிசாமி,கோவை முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு அமைப்பு செயலாளர் சுந்தர் பேசுகையில், கணினி வாயிலாக தகவல் அறியும் உரிமை சட்டம் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சாதாரண மக்களும் பயன்பெறும் வழி வகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் விமான பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த தொகையினை விமான நிறுவனங்கள் நிறுவனங்களிடமிருந்து திரும்ப பெற ஏபிஜிபி யின் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உடன் அந்தத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு ரூ.2லட்சத்திலிருந்து ரூ.5லட்சம் காப்பீடு பெறுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டு அக்கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது என்றார்.

Tags : Indian Planet Panchayat Movement Meeting ,Tennilai East Panchayat ,
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...