×

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் வந்த காட்டு மாடு

ஊட்டி, நவ. 5: கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் வந்த காட்டு மாட்டை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கோத்தகிரி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் தற்போது நாள்தோறும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் காட்டு மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். சில சமயங்களில் இந்த காட்டுமாடுகள் தாக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த வாரம் கோத்தகிரி பகுதியில் காட்டு மாடு தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் ஒரு காட்டு மாடு வந்தது. இதனை கண்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தொடர்–்ந்து மார்க்கெட் வழியாக இந்த காட்டு மாடு வெளியேறியது. எனினும், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித விபத்தும் ஏற்படவில்லை.

Tags : office premises ,Kotagiri Tashildar ,
× RELATED கொடநாடு விவகாரத்தில் புதிய திருப்பம்...