×

பாவூர்சத்திரம் அருகே மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு

பாவூர்சத்திரம், நவ.4: பாவூர்சத்திரம் அருகே மாயமான இளம்பெண் ஊருக்கு அருகிலுள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி நாகம்மாள்(29). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் நாகம்மாளை காணவில்லை.

இதையடுத்து முருகன் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீட்டில் தேடி வந்தனர். 2 நாட்களுக்கு பிறகு ஊர் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் நாகம்மாள் இறந்து கிடப்பதாக தெரிய வந்தது. தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் நாகம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நாகம்மாளின் தந்தை பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,Pavoorchatram ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...