திருப்புவனம், நவ. 4: திருப்புவனம் அருகே மாரநாட்டை சேர்ந்தவர் பூமிநாதன் (60). இவர் நேற்று தனது மனைவி ராசு (50), பேரன் கதிர்வேல் (8) ஆகியோருடன் டூவீலரில் ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பாப்பான்குளம் விலக்கு அருகே வந்த போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ராசு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.