×

சேத சாலைகளை சீரமைக்க கோரி தேய்ந்த டயர்களுடன் ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம், நவ. 4:  ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதுடன், வாகனஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை கண்டித்தும், சாலைகளை உடனே சீரமைக்க கோரியும் நேற்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகிக்க, தாலுகா தலைவர் முனீஸ்வரன் முன்னில வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் நகராட்சியில் சேதமடைந்த அனைத்து சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும், தனுஷ்கோடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர். இதில் தீவு செயலாளர் செந்தில்வேல், நிர்வாகி திருவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,roads ,Rameswaram ,
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...