பரமக்குடி, நவ. 4: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளை கொண்ட பெரிய நகராட்சியாக உள்ளது. இப்பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்து வருவதாக தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆணையர் ராமர் உத்தரவின்பேரில் கால்நடைதுறையினர், விவேகா அறக்கட்டளையினர் இணைந்து பரமக்குடி நகரில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.