×

தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம் அமைச்சர் உதயகுமார் ஆய்வு

திருமங்கலம், நவ.4:  திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். திருமங்கலம் நகரில் நீண்ட ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங் கிவருகிறது. நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு ஜனவரி மாதம் பணிகள் துவங்கியது. மதுரை-விருதுநகர் ரோட்டில் ராஜபாளையம் பிரிவு பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் சுமார் ரூ.98 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடைந்து சுற்றுச்சுவர், முன்புறம் பிளாட்பாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  நேற்று புதிய தீயணைப்பு நிலையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆய்வு செய்தார். மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கல்யாணகுமார், திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி, காவலர் வீட்டு வசதி வாரிய பொறியாளர் பாண்டியராஜன் ஆகியோருடன் புதிய அலுவலகத்தில் கூடுதல் வசதிகள் தேவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கூறிய அமைச்சர் உதயகுமார், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து புதிய கட்டிடம் திறக்கப்படும் என்றார்.

Tags : Udayakumar ,building ,fire station ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...