×

ஆத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்

திண்டுக்கல், நவ.4: ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக.வில் இணைந்தனர். அதிமுகவைச் சேர்ந்த ஆத்தூர் ஊராட்சி தலைவர் ஜம்ரூத்பேகம்,   அதிமுக கிழக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர்  ஹக்கீம் சேட் மற்றும் சீவல்சரகு ஊராட்சி தலைவர் ராணி, செம்பட்டி கூட்டுறவு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் திமுக.வில் இணைந்தனர். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன்,ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், அய்யம்பாளையம் பேரூர் செயலாளர் அய்யப்பன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், திண்டுக்கல் ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பொன் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : panchayat leaders ,Attur AIADMK ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி