×

கூலி உயர்வு கேட்டு போராடுவதால் தனியார் நிறுவனங்கள் மிரட்டல்

திண்டுக்கல், நவ.4: கூலி உயர்வு கேட்டு போராடுவதால் தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் மிரட்டுவதாக  கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கோழி பண்ணை உரிமையாளர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் நேற்று வருகை தந்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர்  விஜயலட்சுமியிடமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவிடமும் வழங்கினர். மனுவில், கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் தங்களை மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். தங்களுக்கு வளர்ப்பு கோழிக்கான கூலியை உயர்த்தி தரும்வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Tags : companies ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...