×

காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களை பேச அனுமதி மறுத்ததால் வாக்குவாதம்

புதுக்கோட்டை, நவ.4: புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார். வடக்கு மாவ ட்டம், தெற்கு மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் இருந்து மாவட்ட , வட்டார காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலருக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் பேச வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆலோசனை கூட்டம் என்று தெரிவித்துவிட்டு பேசவிடாமல் இருப்பதும், சிலரை மட்டும் பேசவிடுவதும் ஏற்கதக்கதல்ல என்று கூச்சலிட்டனர்.

சிலர் மேடை அருகே சென்று மாவட்ட நிர்வாகிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து சென்று சமாதான படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் எம்எல்ஏ புறக்கணிப்பு:  மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முறையான அங்கீகாரம் வழங்கவில்லை என்று முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராமசுப்பு உள்ளிட்ட சில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

Tags : volunteers ,Congress ,election consultation meeting ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு