×

மர்ம நபருக்கு வலை ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் புதுகை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, நவ.4: ஊரா ட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புதுகை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது-. மாநில பொதுச் செயலாளர் மணிராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பணியின் போது உயிர் இழந்த ஊராட்சி செயலர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சியில் போதிய நிதி இல்லாமல் ஊதியம் வழங்காமல் உள்ளது. உடனடியாக ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வெளியிடப்பட்டுள்ள பணி மூப்பு பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், உரிய விசாரணையின்றி ஊராட்சி செயலர்கள் பணி மாறுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை விரைவில் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

Tags : meeting ,Budugai District Executive Committee ,Mystery Person ,Web Panchayat secretaries ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...