×

ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.4: ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குருசாமி பேசினார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் 15 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : BSNL ,contract workers ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு