×

பயிர் காப்பீட்டு தொகை கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, நவ. 3:  தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும் மற்றும் கடந்த ஆண்டில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி  பயணியர் விடுதி முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் நாராயணசாமி  தலைமை வகித்தார். துணைத்தலைவர் நம்பிராஜன், மாவட்டத் தலைவர் நடராஜன், மாநில  செயலாளர் சீனிராஜ், மாவட்ட துணைத்தலைவர் சாமியா, மாவட்ட துணைச்செயலாளர்  மார்ட்டின், அவைத்தலைவர் வெங்கிடசாமி, மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி வெள்ளத்துரை, பசுவந்தனை சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Kovilpatti ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...