×

முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

ஸ்பிக்நகர், நவ. 3:  முத்தையாபுரம் எஸ்ஐ சதீஷ் மற்றும் போலீசார் முள்ளக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் முள்ளக்காடு ராஜிவ்நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சின்னராசு (25) என்பதும் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றதும் தெரியவந்தது.  இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Cannabis seller ,Mullakkadu ,
× RELATED உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர்