×

புதுவை ரெட்டியார்பாளையத்தில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் துணிகரம்

புதுச்சேரி, நவ. 3: ரெட்டியார்பாளையத்தில் ஆளில்லாத வீட்டை உடைத்த கொள்ளை கும்பல் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் எஸ்பிஐ காலனி மெயின் ரோட்டில் வசிப்பவர் ரவி (31). கடந்த 19ம் தேதி இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் திருமண விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். இதனால் அவரது வீட்டை திலகர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த மைத்துனரான பேராசிரியர் தியாகராஜன் (34) கவனித்து வந்தார்.2 வாரமாக ரவியின் வீடு பூட்டிக் கிடந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், தியாக ராஜனுக்கு தகவல் ெதரிவித்தனர். அங்கு வந்த அவர், கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்து சென்னை சென்றிருந்த தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அவர்களின் அறிவுறுத்தலின்படி அவர், ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் முறையிட்டார்.

வடக்கு எஸ்பி சுபம்கோஷ் உத்தரவின்பேரில் எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆரம், நெக்லஸ், செயின் உள்பட சுமார் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்ததாக தெரிய வந்தது. இதுபற்றிய முழு விவரங்கள் தியாகராஜனின் உறவினர்கள் வீடு திரும்பிய பிறகே தெரிய
வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இந்த துணிகர கொள்ளை சம்பவம் ெதாடர்பாக தியாகராஜனிடம் புகாரை பெற்ற ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்ட தனிப்படையினர், கொள்ளை கும்பலை அடையாளம் காணும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். புதுவையில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு உடைத்து பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Assamese ,house ,jewelery ,Puduvai Retiarpalayam ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்