×

புதிதாக 70 பேருக்கு கொரோனா புதுவையில் தொற்று பாதிப்பு குறைகிறது ஒரே நாளில் 482 பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி, நவ. 3: புதுவையில் நேற்று புதிதாக 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று 2,820 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-62, ஏனாம்-6, மாகே-2 என மொத்தம் 70 பேருக்கு தொற்று இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 595 ஆகவும், இறப்பு விகிதம் 1.69 சதவீதமாகவும் உள்ளது.புதுவை மாநிலத்தில் இதுவரை 35,178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,627 பேர் (89.91 சதவீதம்) குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 482 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 2,956 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,14,989 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2,76,367 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : newcomers ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...