×

தீக்குளித்த பெண் சாவு

கருங்கல், நவ.3: கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (58). இவரது மனைவி செல்வி (54). செல்வி சில மாதங்களுக்கு முன்பு கால் முட்டு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று பின்னர் நடக்க முடியாமல் மனம் உடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். படுகாயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...