×

தலைமை ஆசிரியரிடம் மிரட்டி செயின் பறிப்பு

திருச்சுழி, நவ.3: திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத நபர் தலைமை ஆசிரியரிடம் கத்தி காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றார். திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அருப்புக்கோட்டையை சேர்ந்த திருப்பதி மனைவி சுமதி(52) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் புதிய கட்டிடப்பணியை மேற்கொள்ள அருப்புக்கோட்டையிலிருந்து பேருந்தில் பனையூரில் இறங்கி பள்ளிக்கு செல்ல முயன்றபோது, டூவீலரில் வந்த ஒருவரிடம் சுமதி பள்ளியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். அவருடன் சென்றபோது, சேதுபுரம் காட்டு பகுதியில் வைத்து சுமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 15 பவுன் நகையை கொடுக்குமாறு கத்தியை காட்டி அந்த நபர் மிரட்டினார். மறுப்பு தெரிவித்ததால் சுமதியை கத்தியை வைத்து குத்தப்போவதாக மிரட்டி செயினை அறுத்து விட்டு டூவீலரில் தப்பினார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : headmaster ,
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!