×

விவசாயி தற்கொலை

ஆண்டிபட்டி, நவ. 3: ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யணத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கையாதேவர் மகன் ஜெயப்பிரகாஷ்(42). இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை