×

வேளாண் மசோதா ரத்து கோரி காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

திருப்பரங்குன்றம், நவ.3: வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி திருமங்கலத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நேற்று திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளம், விளாச்சேரி, தோப்பூர், வேடர் புளியங்குளம், சாக்கிலிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேளாண் கையெழுத்து இயக்க பொறுப்பாளர் பழனிக்குமார் நிர்வாகிகள் காசிநாதன் அம்மாபட்டி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

Tags : Congress ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்