×

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் பகல் நேரத்தில் மாற்றம்

திருவாரூர், நவ. 3: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தில் பகல் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரமானது கடந்த 1 ம்தேதி முதல் பகல் நேரத்தில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2. 30 மணி வரையில் 6 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும். மேலும் இரவு நேரங்களில் வழக்கம்போல் எவ்வித மாற்றமும் இன்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என விவசாயிகளுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Daytime change ,district ,Thiruvarur ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்