×

ஜெகதாபட்டினம் மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் இழப்பு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

அறந்தாங்கி, நவ.3: போதிய மீன்வரத்து இல்லாததால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தலங்கள் உள்ளது. இங்கிருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றத்தால், கடலில் மீன்வரத்து குறைவாக உள்ளதால், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடலில் மீன்வரத்து குறைவாக உள்ளதால், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஜெகதாபட்டினம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : sea ,fishermen ,Jegathapattinam ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...