×

பண்டிகை காலத்தையொட்டி காரைக்காலில் சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்

காரைக்கால், நவ.3: பண்டிகை காலத்தில், முக்கிய சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதை தவிர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், புதுச்சேரி முன்னாள் அமைச்சருமான நாஜிம் கூறியது: காரைக்காலில் அடுத்தடுத்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளது. இந்த காலத்தில், நகர் பகுதியில், பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கி இருப்பது தவிக்கப்பட வேண்டியது. இதன் காரணமாக, வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பள்ளம் தோண்டும்போது, அந்த பள்ளத்தை மீண்டும் பழைய நிலைக்கு தார்போட்டு சரி செய்யவேண்டும் என்பது டெண்டர் விதிகள். ஆனால், கடந்த பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல இன்னமும் சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே, அனைத்து பள்ளங்களையும் சரி செயதபிறகு, புதிய பள்ளங்களை தோண்ட முன்வர வேண்டும். குறைந்தபட்சம், பண்டிகை காலத்திலாவது பள்ளங்களை தோண்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags : roads ,season ,Karaikal ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு