×

தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு கண்காட்சி : கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளுர், நவ.1: திருவள்ளுர் ஜே.என்.சாலை, பூமாலை வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தீபாவளி சிறப்பு கண்காட்சியை கலெக்டர் பா.பொன்னையா நேற்று துவக்கி வைத்து, புதிய ரக ஆடைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு கண்காட்சி என்ற பெயரில் கைத்தறித் துணிகளின் கண்காட்சி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடத்த இருக்கிறது. இதில் நெசவாளர்களால் அவர்களின் கைத்திறனில் அழகுடன் சீரான நெசவிலும் பல வண்ணத்தில் நெய்யப்பட்ட கைத்தறி இரகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு கண்காட்சி அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆர்கானிக் பருத்தி சேலைகள், காரைக்குடி செட்டிநாடு பருத்தி சேலைகள், பல புதிய நேர்த்தியான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் பருத்தி சேலைகள் மற்றும் பலவிதமான கைத்தறி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான துணி ரகங்களுக்கு 30% வரை அரசின் தள்ளுபடி வழங்கப்படுகிறது’’ என்றார்.

Tags : Co-optex Special Exhibition ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...