×

காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்

செங்கல்பட்டு, நவ.1: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்பு சட்டங்களை திரும்ப பெறக் கோரி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே அறவழி போராட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராமன்,குமரவேல், மணிகண்டன்,முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜெ.பாஸ்கர் வரவேற்றார். மாநில பொதுக்குழ உறுப்பினர்கள் சி.ஆர்.பெருமாள், பாஸ்கர் நகர தலைவர்கள் தனசேகர், கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டு,  மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி  சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்: மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் அருகில் அறவழி அமர்வு பேராட்டம் நேற்று நடந்தது.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். மாவட்ட  நிர்வாகிகள் வீரபத்திரன், ராதாகிருஷ்ணன், லோகநாதன், ரவி, சடையாண்டி, வட்டார நிர்வாகிகள் சுகுமார், மேகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Congress ,party ,
× RELATED பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சி காங்கிரசில் ஐக்கியம்