×

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு

வேலூர், நவ. 1: வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழந்தார். வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(57), சாராய வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்த அறையில் இருந்த கைதிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, சிறை காவலர்கள் வலியால் துடித்த பழனியை, மீட்டு வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,trial ,Vellore Central Jail ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது