×

சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் சிவத்தையாபுரம் வாலிபர்கள் அதிமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி, நவ.1: தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் இளைஞர் நாடார் முன்னேற்ற சங்கத் தலைவர் சிவத்தையாபுரம் சிவகுருசண்முகராஜ் தலைமையில் நிர்வாகிகள் சேதுராம அழகுபாண்டியன், கார்த்திக், அருண்குமார், சுரேஷ், தசரதன், மிக்கேல்ராஜ், மாரி, சுபாஷ், சரவணன், கன்னி, சீனிபெருமாள், சிவபாலன், மாலைசூடிராஜா மற்றும் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கோட்டைமுத்து, சிங்காரவேலன், ஜெயராமன், சண்முகம், நவலட்சுமிபுரம் சங்கர், மாசானம், பட்டாணி, சிவா, ஆதிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாலிபர்கள் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

 அப்போது எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் வீரபாகு, இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் நடராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் பிரபாகர், பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், சாயர்புரம் பேரூராட்சி செயலாளர் துரைச்சாமிராஜா, மாணவர் அணி மாவட்டச் செயலாளர் பில்லா விக்னேஷ், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் முனியசாமி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட  இணைச் செயலாளர் பாஸ்கர்,  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட  இணைச்செயலாளர் சகாயராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்ட  இணைச்செயலாளர் இம்ரான், வட்ட செயலாளர்கள் ஜெகதீஸ்வரன்,  பழனிச்சாமிபாண்டியன்,  பாலஜெயம், சாம்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : youths ,AIADMK ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை