×

நெல்லை பிஎப் அலுவலகம் மூலம் ஓய்வு பெறும் நாளன்று 7 பேருக்கு ஓய்வூதிய ஆணை

நெல்லை, நவ.1: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் ஓய்வூதிய உறுப்பினர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளன்று மாத ஓய்வூதிய ஆணையை வழங்குவதற்கான ‘பிரயாஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி ஓய்வு பெறும் தினத்தன்று, அதாவது ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி வேலை நாளில் மாத ஓய்வூதிய ஆணையை பிஎப் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம். நெல்லை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் 7 உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை நெல்லை மண்டல ஆணையர் (பொறுப்பு) கலைச்செல்வன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கணக்கு அதிகாரிகள் சரோஜா, ஈஸ்வரமூர்த்தி, அமலாக்க அதிகாரிகள் ஹரிகிருஷ்ணன், நாகேஸ்வரி, திலகர், சப்ரினா பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் பயனடைவதற்கு நிறுவனதாரர்கள் தங்களது ஊழியர்களில் 58 வயது பூர்த்தி அடைந்து பணி மூப்பு பென்சன் பெற தகுதியானவர்களுக்கு கேஒய்சி, புரோபைல், நாமினேசன் ஆகிய தகவல்களை ஆன்லைன் மூலம் தவறு இன்றி பதிவு செய்வதுடன், கடைசி மாத பங்களிப்பு சந்தாவை முந்தைய மாத தவணையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். தேவையான கூடுதல் ஆவணங்களை முறையான இணைத்து பென்சன் கோருவதற்கான படிவம் ‘10 டி’ நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பித்து பணி ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதிய ஆணை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : retirement ,persons ,Nellai PF ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...