×

மேலப்பாளையம் அன்னைநகரில் சாலையில் கழிவுநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

நெல்லை, நவ. 1: மேலப்பாளையம் அன்னைநகர் பகுதி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் வழியில் அன்னை நகர் பகுதி சாலையின் நடுவே கழிவுநீர் செல்கிற பாதாள சாக்கடை குழாய் உள்ளது. இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் சரிசெய்வதற்காக குறிப்பிட்ட தூரங்களில் மூடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் உள்ள குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், குழாயின் மேல்புறம் உள்ள மூடியின் வழியாக கழிவுநீர் கசிந்து வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Motorists ,road ,Anna Nagar ,Melappalayam ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை