×

விருதுநகரில் துணிகரம் கார் கண்ணாடியை உடைத்து 18 பவுன் திருட்டு

விருதுநகர், நவ. 1: கோயம்புத்தூர் கீழமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (40). தனியார் வங்கி மேலாளர். நெல்லையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று காரில் கோயம்புத்தூர் திரும்பி சென்றுள்ளார். விருதுநகர்- மதுரை ரோட்டில் உள்ள ஓட்டலில் மதிய உணவு அருந்த காரை ஓட்டல் முன் நிறுத்தி, சாப்பிட்டு திரும்பி வந்தார். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரினுள் இருந்த 18 பவுன் தஙக நகை, ஆவணங்கள் இருந்த இரு பேக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து விஜயன் புகாரின் பேரில் விருதுநகர் ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...