×

கடமான் சாவு

வருசநாடு, நவ.1: கண்டமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட பாலூத்து மலைப்பகுதியில் 4 வயது ஆண் கடமான் தண்ணீரை தேடி தனியார் தோட்ட பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பொதுமக்களை கண்டு அச்சத்தில் கடமான் தப்பி ஒடியதில் மூச்சு திணறி இறந்து விட்டது. கண்டமனூர் ரேஞ்சர் ஆறுமுகம், வனவர் செல்வராஜ், கால்நடை மருத்துவர் வெயிலான், வேட்டை தடுப்பு காவலர் நீதி ஆகியோர் இறந்த கடமானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து மலைப்பகுதியில் புதைத்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு