×

மிரட்டலால் வாலிபர் தற்கொலை உடலை வாங்க மறுத்து மறியல்


சிவகங்கை, நவ.1:  வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். மானாமதுரை அருகே கீழப்பிடாவூரை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவர் கடந்த 29ம் தேதி விஷம் குடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். காதல் பிரச்னையால் ரமேஷ் மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி கீழப்பிடாவூர் பொதுமக்கள் மற்றும் ரமேஷின் உறவினர்கள், இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் உடலை வாங்க மறுத்து மானாமதுரை சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

சிவகங்கை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தார். மானாமதுரை முன்னாள் எம்எல்ஏ தங்கமணி, இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கண்ணகி உள்ளிட்ட சுமார் 150க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்பி சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சேது மறியல் போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...