×

மர்ம நபர்களுக்கு வலை 26ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் திருவாரூர் மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்பு ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு

திருவாரூர், நவ. 1: வரும் 26ம்தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகம் பேர் கலந்து கொள்வது என ஏஐடியுசி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது. ஏஐடியூசி தொழிற்சங்கம் துவங்கப்பட்டு நூற்றாண்டு விழாவினையொட்டி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் ஏஐடியுசி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் புண்ணீஸ்வரன் மாவட்ட துணைச் செயலாளர்கள் காந்தி, செல்வம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், மீனவர் அணி மாநில செயலாளர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வரும் 26ம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகம் பேர் கலந்து கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Strike ,India ,Thiruvarur District Mass Participation AITUC Meeting ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து