×

பூதலூர் தாசில்தார் பணியிட மாற்றம் கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு உள்ளிருப்பு போராட்டம்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 1: பூதலூர் தாசில்தார் சிவகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை நிரந்தர தாசில்தாராக பணியமர்த்த தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கோரி பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினர் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் தலைவர் பழ.ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் வீரசிங்கம், அற்புதராஜ், தமிழன் காமராஜ், ராஜகிருபாகரன் பங்கேற்றனர். காலை 11 மணி முதல் 2 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அப்போது அவர்களிடம் தாசில்தார் சிவகுமார் பேசுகையில், வருங்காலத்திலும் உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு தஞ்சையில் பணியில் இருந்தபடி அனைத்து உதவிகளையும் செய்கிறேன். புதிதாக வரும் தாசில்தாருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். இதையேற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags : People's Rights Alliance ,Puthalur Tashildar ,
× RELATED தூய்மை பணியாளரை அரசு ஊழியர்களாக...