×

கஞ்சா வியாபாரி உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை, நவ. 1: தஞ்சையில் கஞ்சா வியாபாரி உட்பட 2 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தஞ்சை கரந்தை மேலநீத்துக்கார தெருவை சேர்ந்த தினகரன் மகன் குஜிலிராஜா (எ) ராஜா (28). இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கோவிந்தராவ் கடந்த 28ம் தேதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மற்றொருவர் கைது: பாபநாசம் வட்டம் ராராமுத்திரைக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் மகேஷ் (42). இவர் பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் பரிந்துரைபேரில் மகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடந்த 28ம் தேதி கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். அதன்பேரில் மகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags : cannabis dealer ,
× RELATED கஞ்சா வியாபாரி என அவதூறு நடிகை வனிதா மீது இளம்பெண் புகார்