×

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்


பெரம்பலூர், நவ. 1: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் சுவாமிக்கு ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம். அதேபோல் நேற்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனம், குங்குமம், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து 508 கிலோ அரிசியால் செய்யப்பட்ட சாதத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Tags : Annabhishekam ,occasion ,Walliswarar Temple ,Ipasi Pavurnami ,
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...