×

கோயில் நிலம் போலீசாருக்கு வழங்கிய விவகாரம் அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணித்த பொதுமக்கள்

திருப்பூர், நவ.1: திருப்பூரில் கோயில் நிலத்தை மாநகர போலீசாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையை பொதுமக்கள் புறக்கணித்தனர். திருப்பூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வழித்தடம் போக 9 ஏக்கர் நிலத்தை ரூ.5 கோடிக்கு மாநகர போலீசாருக்கு இந்து சமய அறநிலையத்துறை விற்பனை செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கிராம மக்களும் காலம், காலமாக வழிபட்டு வரும் கோயில் நிலத்தை யாருக்கும் தெரியாமல் விற்றதை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் புறக்கணித்தனர்.

Tags : temple land ,public ,peace talks ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...