×

வெற்றிலை ஒரு கட்டு ரூ.1500க்கு விற்பனை பொள்ளாச்சி, நவ. 1: வெற்றிலை ஒரு கட்டு ரூ.1500க்கு ஏலம் போனது.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சுற்று வட்டாரத்தில் குறிப்பிட்ட கிராம பகுதியிலிருந்தும், கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வெற்றிலைகள் கொண்டு வரப்படுகிறது. வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏலம் நடைபெறும். கடந்த புரட்டாசி மாதத்தில்  சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததால் ஒரு கட்டு வெற்றிலை அதிகபட்சமாக ரூ.1200க்கே விற்பனையானது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் வெற்றிலை அறுவடை அதிகரித்தது. இதனால், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெற்றிலை வரத்து அதிகரிக்க துவங்கியது.இதில்  நேற்று நடந்த ஏல நாளின்போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தே வெற்றிலை கட்டுகள் அதிகம் வந்தது. ஆனால், நேற்றும் விற்பனை மந்தமாகி குறைவான விலைக்கு ஏலம்போனது. சுமார் 6500 முதல் 7 ஆயிரம் எண்ணம் கொண்ட ஒருகட்டு வெற்றிலை ரூ.1200 முதல் அதிகபட்சமாக ரூ.1500 வரை என,  குறைந்த விலைக்கே  ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!