×

திரளான பக்தர்கள் பங்கேற்பு கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவருக்கு வலை

கொள்ளிடம், அக்.30: கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் பாலூரான் படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அனுமதிஇன்றி மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் போலீசார் மணலுடன் டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Crowds ,devotees ,river ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...