×

போலீசாருக்கு கொரோனா எதிரொலி திருச்செங்கோடு புறக்காவல் நிலையம் மூடல்

திருச்செங்கோடு, அக்.30:  போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்செங்கோடு புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எழுத்தர் மற்றும் எஸ்ஐக்கு, கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் காவல் நிலையம் மூடப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்காக காவல் நிலைய வளாகத்தில் பிரதான கட்டிடத்திற்கு வெளியே, குறைந்த அளவு போலீசார் பணியில் இருந்தனர். போலீசார் இருவருக்கு தொற்று உறுதியானதால், புறநகர் காவல் நிலைய போலீசார் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி, மருத்துவர்கள்  அறிவுறுத்தினர். நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தடை செய்யப்பட்ட பகுதி என தட்டி கட்டியுள்ளனர். திருச்செங்கோட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக ஒன்றிரண்டாக இருந்தது. நேற்று 8 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona ,Tiruchengode ,outpost closure ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு