×

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், அக்.30: விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு, குமாரபாளையத்தில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்களில் வேலை செய்யும் அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும், 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி குமாரபாளையத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் நேற்று சங்க தலைவர் மாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுப்ரமணி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். சங்க நிர்வாகிகள் நாகராஜ், சுப்ரமணி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியில் குமாரபாளையம் தாசில்தார் தங்கத்தை சந்தித்து, தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்தனர். இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரை கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Tags : Trade unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...