×

பெண்ணிடம் நகை பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர், அக். 30: கடலூர் வெண்மணி நகரை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ெஜயந்தி(49). இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 6ம் ேததி மாலை பாப்பம்மாள் நகர் வெண்மணிமூர்த்தி கோயிலுக்கு சென்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கோண்டூர் மாசிலாமணி நகர் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த நபர் ஜெயந்தி அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

இது குறித்து ெஜயந்தி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஏடிகே காலனியை சேர்ந்த ராஜாமணி மகன் ரமணி(34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை கடலூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்து குற்ற செயலில் ஈடுபட்ட ரமணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவபழனி தீர்ப்பு வழங்கினார்.

Tags : Cuddalore ,jail ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!