×

தூத்துக்குடி அருகே சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி

ஸ்பிக்நகர், அக். 30:  தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே சாந்திநகர் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட சாலைகள் தாழ்வாக காணப்படுகின்றன. குறிப்பாக 3வது தெருவில் அமைக்கப்பட்ட சாலை சுற்றுவட்டார பகுதிகளை காட்டிலும் மிகுந்த பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் சிறிது மழைபெய்தால் கூட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருக்கெடுக்கும் மழைநீர் சாந்திநகர் 3வது தெருவை சூழ்ந்தும் தாழ்வான சாலை பகுதிகளில் தேங்கியும்  நிற்கும் அவலம் தொடர்கிறது. இப்பகுதியில் போதுமான அளவுக்கு வடிகால் வசதியும் செய்துகொடுக்கப்படாததால் கழிவுநீரும் வெளியேற முடியாமல் நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது.

நேற்று முன்தினம் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலை உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் சிறுகுழந்தைகளை வைத்துகொண்டு தேங்கி நிற்கும் மழைநீரில் மக்கள் நடந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதற்கு உரிய தீர்வு காண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thoothukudi ,roads ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...