தூத்துக்குடி, அக்.30: தூத்துக்குடி மாவட்ட அமமுக சார்பில், மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் 2ஆயிரம் முககவசம் மற்றும் 500கிருமிநாசினி பாட்டில்களை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரிடம், மாநில அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் வழங்கினார்.
இதில், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் எட்வின்பாண்டியன், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் சண்முககுமாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயலட்சுமி, அண்ணா நகர் பகுதி செயலாளர் ரூஸ்வெல்ட், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகைராஜன், ஜெ.பேரவை மாவட்ட இணைச்செயலாளர் ராமசந்திரன், மாவட்டப் பிரதிநிதி தாசன், வக்கீல் நம்பிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.