மன்னார்குடி, அக்.29: ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவீதஇடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்ககோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி விசி கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் ரமணி, நகர செயலாளர் அறிவுக்கொடி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்வேந்தன, சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதவன், மாவட்ட பொருளாளர் வெற்றி ஆகியோர் பேசினர்.