×

கலெக்டர் அலுவலகத்தில் மனு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுக்கோட்டை நகராட்சி

புதுக்கோட்டை, அக்.29: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள புதுக் கோட்டை நகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி ஆணையர் ஜஹா ங்கீர் பாஷா நேற்று செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர், பருவ மழையின் போது கிடைக்கப்பெறும் மழைநீரை முழுவதுமாக சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணித்திட்டம் மற்றும் ஏரி, கால்வாய்கள், வரத்துவாய்க்கால்களை தூர்வாருதல் என முன் எப்போதும் இல்லாத வகையில் நீர்மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதே போன்று கடந்தகால நிகழ்வுகளை கருத்தில்கொண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு உள் ளிட்ட நோய்தொற்று தடு ப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மாவ ட்ட கலெக்டரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை நகராட்சியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகராட் சியை பொறுத்தவரை 42 வார்டுகளை உள்ளடக்கி 499 வீதிகள் மற்றும் 36,030 வீடுகள் என 1,43,748 நபர்களை உள்ளடக்கிய மக்கள் தொகையை கொண்டதாக புதுக்கோட்டை நகராட்சி விளங்குகிறது. வடகிழக்கு பருவமழையின் போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 400 பணியாளர்களை கொண்டு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் லார்வா கொசுப்புழு உருவாகாத வகையில் மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதால் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தங்கள் வீட்டில் பிரிட்ஜ் பின்புறம் நீர் தேங்காத வகையில் அவ்வப்போது அப்புறப்படுத்தவும், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகள் தங்கள் வீடுகளை சுற்றி இல்லாமல் அப்புறப்படுத்திட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர டெங்கு ஒழிப்பு பணியில் 80 பணியாளர்கள் முழுநேரம் பணியாற்றி வருகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கென 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 2 தரைமட்ட தொட்டிகளும் என 14 நீர்த்தேக்க தொட்டிகள் அமையப்பெற்றுள்ளது. இத்தண்ணீர் தொட்டிகளுக்கு நீரேற்று நிலையங்களான திருவப்பூர், மச்சுவாடி, அம்மையாபட்டி ஆகிய நீரேற்று நிலையங்களில் தினந்தோறும் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டு முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குப்பைகள், கழிவுநீர் உள்ளிட்டவைகளை தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும், இப்பணிகளை கண்காணித்திட தனி அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இத்தகைய தருணத்தில் காய்ச்சிய நீரை பருகுதல், தங்கள் சுற்றுச்சுழலை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்ட அரசு கூறும் வழிமுறைகளை தவறாது கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Pudukottai Municipality ,
× RELATED மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணி