×

புதுக்கோட்டையில் மேலும் 32 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, அக்.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,523 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,149 ஆக உயர்ந்துள்ளது. புதிய இறப்பு இல்லாததை அடுத்து மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 149 ஆகத் தொடர்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 225ஆக உள்ளது.

Tags : Corona ,Pudukkottai ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...