×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஒப்புதல்

புதுக்கோட்டை, அக்.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட இருந்த மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் தர் தெரிவித்துள்ளதாவது: லாரிகளில் மணல் ஏற்றுமதி செய்வோர் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்குமே கொண்டு செல்லப்படுகிறது. மாட்டுவண்டிகளில் அள்ளப்படும் மணல் அனைத்தும் மாவட்டத்திற்குள் அந்தந்தப் பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி அக்னியாறு, ஆவுடையார்கோவில் வெள்ளாறு, குடுமியான்மலை பாம்பாறு, மழையூர் அக்னியாறு, அரிமளம் வெள்ளாறு, கடையக்குடி வெள்ளாறு, விராலிமலை கோரையாறு, அறந்தாங்கி பெருநாவர் உள்ளிட்ட 9 இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வலியறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சிஐடியூ நிவாகிகளை பேச்சுவார்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஏ.தர் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கோரியுள்ள 15 இடங்களிலும் தல ஆய்வு செய்து மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கையை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று (28ம் தேதி) நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். தவறும் பட்சத்தில் மீண்டும் எங்களது போராட்டம் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : cattle sand quarry ,Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...